கொழும்பு சுற்றுவட்டாரத்தில் 3,000 பேரை தங்க வைக்கும் வகையில் கெத்தாரமா ஆர். பிரேமதாச மைதானம் அவசர அனர்த்த முகாமாக மாற்ற தீர்மானம்
கொழும்பு பிரதேசத்தில் நிலவும் மோசமான வானிலை மற்றும் வெள்ள அபாய நிலைமையை முன்னிட்டு, கொழும்பைச் சூழவுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 3,000 பேரை பாதுகாப்பாக தங்க வைக்கும் அவசர அனர்த்த முகாமாக கெத்தாரமா ஆர். பிரேமதாச மைதானத்தை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு கொழும்பு பிரதேச அபிவிருத்தி குழுவால் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முகாமில் தங்குபவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், சுகாதாரம் மற்றும் அவசர மருத்துவ வசதிகள் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வானிலை மேலும் மோசமடையும் வாய்ப்புள்ளதால், மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், அதிகாரிகள் வெளியிடும் அவசர அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.








