மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான விவசாய குளமாக காணப்படும் உன்னிச்சை குளம் 03 வான்கதவுகள் மூலம் 04 அடி வரை திறக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ள நிலையில், வெள்ளம் வடிந்தோடி, மக்கள் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றது.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் விடுத்துள்ள அறிக்கையின்படி 12,476 குடும்பங்களைச் சேர்ந்த 36 ஆயிரத்து 294 பேர் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் நிலவும் சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் விடுத்துள்ள அறிக்கையின்படி 12,476 குடும்பங்களைச் சேர்ந்த 36 ஆயிரத்து 294 பேர் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் இரண்டு மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

மேலும் இன்று நண்பகல் வரை 14 நலம்புரி நிலையங்களில் 1165 குடும்பங்களை சேர்ந்த 3326 நபர்கள் தங்க வைத்திருப்பதாகவும் மேலும். இந்த மாவட்டத்தில்.. பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும். இவர்களுக்கு சமைத்த உணவு வழங்குவதற்கான சகல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே எஸ் அருள்ராஜ் தெரிவித்தார்.
இது தவிர இந்த மாவட்டத்திலே 7,436 குடும்பங்களை சேர்ந்த 226 13 பேர் நண்பர் உறவினர்களில் தங்கி இருப்பதாகவும் இங்கு அறிவிக்கப்படுகிறது.
இன்று நண்பகல் வரையில் சீரான காலநிலை நிலவிய போதிலும் இன்று மாலை. சீரற்ற காலநிலை தொடர்வதாக க தெரிகிறது.
வைக்கப்பட்டுள்ளதால். சுமார் 1500 ஏக்கர் நெல் வயல்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.
இது தவிர நவகிரி குளம் திறக்கப்பட்டு இருப்பதால் 400 ஏக்கர் நெல் வயல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும். நீர்ப்பாசன மாவட்ட பணிப்பாளர் முகமது இப்ராஹிம் தெரிவித்தார்.
இதேவேளை. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் தொடர்ந்து செல்வதாக மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜ் மேலும் தெரிவித்தார்.








