கோறளைப்பற்றுபிரதேச சபையின் நிர்வாகத்திற்கு உட்பட்ட இடங்களில் நீர் வழி போக்குவரத்தில் ஈடுபடும் போது மக்களின் பாதுகாப்பு நலன் கருதி ஒரு தொகுதி உயிர் பாதுகாப்பு மேலங்கிகள் இன்று (06) வாழைச்சேனை லயன்ஸ் கழகத்தினால் பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரனிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது 306 D வலயத்திற்கான லயன்ஸ் கழக ஆளுநர் லோகேந்திரன் உப தவிசாளர் க. பத்மநீதன் பிரதேச சபை உறுப்பினர் வெ.பிறைசூடி மற்றும் வாழைச்சேனை லயன்ஸ் கழக தலைவர் எஸ் கார்த்திபன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இவற்றினை பெற்றுக்கொண்ட தவிசாளர் உடனடியாக சந்தி வெளி துறைமுகத்திற்கு சென்று பாதையில் போக்குவரத்தை மேற்கொள்ளும் போது மக்களுக்கு அணிவித்ததுடன் பாதுகாப்பாக பயணத்தை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்.
அத்துடன் நாசீவன் தீவுக்கும் வாழைச்சேனைக்கும் இடையில் படகில் நீர் வழி போக்குவரத்தில் ஈடுபடும் பிரதேச மக்களுக்கும் பாதுகாப்பு நலன் கருதி இவை வழங்கி வைக்கப்படும் என தவிச்சாளர் தெரிவித்தார்.


















