நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கான நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கையானது மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களிலும் இடம்பெற்று வருகிறது.
அதில் குறிப்பாக வாழைச்சேனை,கிரான் ,கோரகல்லி மடு , முறக்கொட்டான் சேனை போன்ற இடங்களில் இவ் சேகரிப்பு நிகழ்வு நடைபெற்று வருகிறது.
வாழைச்சேனையில் அன்னை திரேசா ஆலயம் சார்பாகவும் கிரானில் கருணா ஐக்கிய விளையாட்டு கழகத்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆலயங்கள் பொது அமைப்புகள் என்பன இணைந்து இவ் மக்கள் நலப் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போன்று கோரகல்லிமடு முறக்கொட்டான்சேனை போன்ற இடங்களிலும் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேத்தாழை ஸ்ரீ பாலீஸ்வரர் ஆலய தலைவரினால் ஆலயம் சார்பாக நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
பிரதேச மக்கள் ஆர்வத்துடன் தங்களது உறவுகளுக்காக பொருட்களை வழங்கி வருகின்றனர் .
மட்டக்களப்பு பிரதான கொழும்பு வீதியில் பிரதேச அமைப்புக்களினால் தற்காலிக கொட்டில்கள் அமைத்து நிவாரண பணி சேகரிப்பில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
அவற்றினை பாகுபடுத்தி பொதி செய்து மத்தியமலை நாட்டில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அப்பகுதி பிரதேச செயலகங்கள் ஊடாக நேரடியாக சென்று வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இச் செயற்பாட்டினை பிரதேச மக்கள் பாராட்டி வருகின்றனர்.















