ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பிரச்சனைகள் வருகின்றன. அப்பிரச்சனைகளை வைத்து எமது உறவுகளுக்கான நீதி கேட்கும் விடயம் மழுங்கடிக்கப்பட்டு வருகின்றது.
எமது உறவுகளுக்கான தீர்வு வேண்டும். அது சர்வதேசத்தினூடாவே வேண்டும் என்பதைத் தான் நாங்கள் எங்கள் ஒவ்வொரு போராட்டம் ஊடகவும், ஊடக சந்திப்புகள் ஊடாகவும் வெளிப்படுத்தி வருகின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி திருமதி அ.அமலநாயகி தெரிவித்தார்.
சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று (10) மட்டு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் நடாத்தியது.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,








