Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மனம்பிட்டி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்திருந்தாலும் அபாய நிலையில் இல்லை

மனம்பிட்டி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்திருந்தாலும் அபாய நிலையில் இல்லை

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மகாவலி கங்கையை அண்டிய மனம்பிட்டி ஆற்றின் நீர்மட்டம் உயர்வான நிலையில் காணப்பட்டாலும், அது வெள்ள நிலையை அடையும் அபாயம் இல்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

மகாவலி ஆற்றுப் படுக்கையில் உள்ள சில நீர்த்தேக்கங்கள் வான்பாயத் தொடங்கியுள்ளதாக அத்திணைக்களத்தின் பணிப்பாளரும், நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பொறியியலாளருமான எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார்.

அத்துடன், அனுராதபுரம் மாவட்டத்தின் தந்திரிகமலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் ஓரளவு உயர்வாகக் காணப்பட்டாலும், அனுராதபுரம் மாவட்டத்தில் பல நீர்த்தேக்கங்கள் வான்பாயும் நிலையிலும், சிறிதளவு மழைவீழ்ச்சி நிலவினாலும், அந்நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் பாரிய அளவில் அதிகரிப்பை வெளிப்படுத்தவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், கடந்த 24 மணித்தியாலங்களில் நீர்த்தேக்கங்களை அண்டிய பகுதிகளில் கிடைத்த மழைவீழ்ச்சிக்கு அமைய, அம்பாறை மாவட்டத்திலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும், அது 25 மில்லிமீற்றர் எனவும் நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்தார்.

அத்துடன், வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளுக்கு அமைய அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும், ஏனைய பல இடங்களில் சிறிதளவு மழை பெய்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் அளவீட்டு நிலையங்களுக்கு அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தற்போது நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள 36 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் வான்பாய்ந்து வருகின்ற போதிலும், அந்த நீர்த்தேக்கங்கள் எதுவும் ஆபத்தான நிலையில் வான்பாயவில்லை எனவும் நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்தார்.

அத்துடன், 52 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்கள் வான்பாய்ந்து வருவதாகவும், அந்த எந்தவொரு நீர்த்தேக்கத்திலும் ஆபத்தான வகையில் வான்பாயவில்லை எனவும் நீர்ப்பாசன பொறியியலாளர் மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

“சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் பதறுவது போல எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன”; எம்.பி. கந்தசாமி பிரபு
செய்திகள்

“சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் பதறுவது போல எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன”; எம்.பி. கந்தசாமி பிரபு

August 1, 2026
கொழும்பு கடற்பரப்பில் 17 கொள்கலன்கள் கடலில் விழுந்தன; மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!
செய்திகள்

கொழும்பு கடற்பரப்பில் 17 கொள்கலன்கள் கடலில் விழுந்தன; மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

August 1, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.10 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.10 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்!

August 1, 2026
ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் மாற்றமில்லை; பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு
செய்திகள்

ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் மாற்றமில்லை; பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு

August 1, 2026
இலங்கைக்குக் கடத்தவிருந்த பாரியளவான கஞ்சாவுடன் மூவர் கைது
செய்திகள்

இலங்கைக்குக் கடத்தவிருந்த பாரியளவான கஞ்சாவுடன் மூவர் கைது

August 1, 2026
நீர்கொழும்பு கடற்பகுதியில் பல மீன்பிடி படகுகள் விபத்து
செய்திகள்

நீர்கொழும்பு கடற்பகுதியில் பல மீன்பிடி படகுகள் விபத்து

August 1, 2026
Next Post
செட்டிகுளம் – வீரபுரத்தில் கூரிய ஆயுதத் தாக்கப்பட்டு19 வயது இளைஞன் கொலை

செட்டிகுளம் – வீரபுரத்தில் கூரிய ஆயுதத் தாக்கப்பட்டு19 வயது இளைஞன் கொலை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.