Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் இருந்து சென்று மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தை புகழ் பாடிய பைத்தியத்தை தெளிய வைக்க வேண்டும்

யாழில் இருந்து சென்று மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தை புகழ் பாடிய பைத்தியத்தை தெளிய வைக்க வேண்டும்

39 minutes ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற ஒரு பைத்தியம், முள்ளிவாய்க்கால் மட்டுமல்லாது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கொத்துக் கொத்தாக தமிழர்களைக் கொன்று குவித்த மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தைப் புகழ்ந்து பாடியுள்ளதாகவும், அந்தப் பைத்தியத்தைத் தெளிய வைக்க விரைவில் மருந்து கட்டுவேன் எனவும், அதேவேளை அனுர அரசாங்கம் 20 வருடங்கள் நிலைத்து நின்று ஆட்சி செய்யும் எனவும் ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியாவில் திங்கட்கிழமை (14) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக கொலை, கொள்ளை, குடிகாரர்கள் தான் இருக்கின்றனர் என்பது உலகத்துக்கே தெரிந்துள்ளது. இருந்தபோதும், அரசாங்கத்திற்கு எதிராக அனுராதபுரத்தில் பெரிய கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு சென்றவர்கள் அனைவரும் வீதியில் தவழ்ந்து கொண்டிருந்ததை முகநூலில் பார்த்திருப்பீர்கள்.

அது மட்டுமல்ல, மஹிந்த அல்லது நாமல் கூட்டத்தில் பணத்தைப் பெற்றுக்கொண்டதற்காக ‘அனுர கள்ளன்’ எனவும், அடுத்ததாக ‘நாமல் கள்ளன்’ எனவும் கோஷமிட்டனர். உண்மையில் அடிமனதில் இருந்து ‘நாமல் கொரா’ எனச் சொல்லப்பட்டது.

பணத்தையும் மதுபானத்தையும் வாங்குவதற்கு ‘அனுர கொரா’ எனச் சொல்வது கடமை. ஏனென்றால் பணத்தையும் மதுபானத்தையும் பெற்றுக்கொண்டதற்காக அவ்வாறு கூறினர். ஆனால், அடிமனதில் இருந்து ‘நாமல் கொரா’ எனச் சொன்னார்கள். இதுதான் நிலைமை.

இலங்கையில் இவ்வளவு பேரும் அனைத்து கட்சிகளுக்கும் ஆதரவாளர்களாக உள்ளனர் என்பது ஊடகங்கள் மூலம் தெரிகின்றது. கடந்த ஊடக சந்திப்புகளில் தெரிவித்ததுபோல், முடியும் என்றால் இந்த அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்படுங்கள். அப்படி இல்லை என்றால் கட்சியைக் கலைத்துவிட்டு வீட்டுக்குச் சென்று ஓய்வு எடுங்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் 75, 80, 90 வயதாகிவிட்டது. இனி உங்களால் முடியாது.

இந்த அரசாங்கம் மக்களின் மனதைத் தொட்ட அரசாங்கம். மக்களால் உருவாக்கப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம். எனவே, இந்த அரசாங்கத்திற்கு எதிராக எதுவும் செய்து வேலை இல்லை.

மக்கள் மனதில் இருந்து அகற்றினால் தான் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியும். எனவே, தயவுசெய்து அதைக் கைவிட்டுவிட்டு அரசாங்கத்திற்கு நல்ல ஆலோசனைகளை வழங்குங்கள். என்னதான் தலைகீழாக நின்றாலும், 20 வருட காலம் இந்த அரசாங்கம்தான் நிலைத்திருக்கும்.

இன்று இலங்கையில் உள்ள மூவின மக்களும் ஜனநாயகக் காற்றை சுவாசித்துக்கொண்டு, சுதந்திரமாக நடமாடி, சுதந்திரமாக தொழில் செய்து, சந்தோஷமாக வாழும் தோற்றப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளது.

அதேநேரத்தில், முள்ளிவாய்க்கால் மட்டுமல்லாது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கொத்துக் கொத்தாக தமிழர்களைக் கொன்று குவித்த மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்துக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு பைத்தியம் சென்று அந்த நயவஞ்சகர்களைப் புகழ்பாடுகிறது.

அந்தப் பைத்தியம் வாங்கிய பணத்துக்காக ஆடியுள்ளார். எனவே, அவர் கடவுளை மன்றாட வேண்டும். எனது கண்ணில் முழித்துவிடக் கூடாது. இந்தப் பைத்தியத்துக்கு கூடிய விரைவில் மருந்து கட்டுவேன். பைத்தியத்தைத் தெளிய வைக்க வேண்டும். இது தமிழ் மக்களுக்கு ஒரு விஷமி, சாபக்கேடு. இவ்வாறான பைத்தியங்கள் காலம் காலமாக வரும். அதை நாங்கள்தான் இனங்காண வேண்டும் என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மொட்டு மேடையில் தன்னை ஒரு புலி என சுட்டிக்காட்டிய அர்ச்சுனாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
செய்திகள்

மொட்டு மேடையில் தன்னை ஒரு புலி என சுட்டிக்காட்டிய அர்ச்சுனாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

September 15, 2026
மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!
காணொளிகள்

மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

September 15, 2026
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

September 15, 2026
மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் காயம்!
செய்திகள்

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் காயம்!

September 15, 2026
மதுபானம் வாங்கிக் கொடுக்கவில்லை; அனுராதபுர கூட்டம் குறித்து சாகர காரியவசம் விளக்கம்!
அரசியல்

மதுபானம் வாங்கிக் கொடுக்கவில்லை; அனுராதபுர கூட்டம் குறித்து சாகர காரியவசம் விளக்கம்!

September 15, 2026
கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
செய்திகள்

கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

September 15, 2026
Next Post
மொட்டு மேடையில் தன்னை ஒரு புலி என சுட்டிக்காட்டிய அர்ச்சுனாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

மொட்டு மேடையில் தன்னை ஒரு புலி என சுட்டிக்காட்டிய அர்ச்சுனாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.