மட்டக்களப்பு ஏறாவூர் பற்று சித்தாண்டியில் வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்டு தங்களது நாளாந்த வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கான நிவாரண பொதிகள் நேற்று முன்தினம் (25.12.2025) தினம் வழங்கி வைக்கப்பட்டன.
சிரேஸ்ட ஊடகவியலாளரும், ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன் அவர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இதுவரை எந்த வித நிவாரணங்களும் வழங்கப்படாத சித்தாண்டி 01 கிராமத்தில் உள்ள சுமார் 65 குடும்பங்களுக்கான நிவாரண பொதிகளை பிரதேச சபை உறுப்பினர் வழங்கி வைத்தார்.
பிரான்ஸ் புலம்பெயர் தமிழர் அமைப்பின் உதவியில் சேவகம் தொண்டு நிறுவனத்தின் ஊடாக ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தனால் மேற்படி உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதுவரை எந்த வித நிவாரண உதவிகளும் கிடைக்காத சித்தாண்டி 01 கிராம மக்களுக்கு தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் அவர்களின் சந்திவெளி இணைப்பாளர் வினோ அவர்களின் ஊடாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய மேற்படி உதவிகளை சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன் அவர்கள் வழங்கி வைத்திருந்தார்.
மேற்படி உதவிகளை வழங்கிய பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் மற்றும் வினோ அவர்களுக்கு சித்தாண்டி 01 கிராம மக்கள் நன்றிகளை தெரிவித்ததோடு மேற்படி கிராமத்தில் உள்ள பொருளாதார பிரச்சினைகள், மற்றும் தாங்கள் வசிப்பதற்கான வீடுகள் இல்லாத பிரச்சினைகள் குறித்தும் பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தனின் கவனத்திற்கு கொண்டு வந்ததோடு அதனை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக தீர்த்து தருமாறும் அந்த மக்கள் கோரிக்கை விடுத்தனர்.








