Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தரமற்ற மருந்துகளால் நோயாளர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை; மருத்துவ அதிகாரிகள்

தரமற்ற மருந்துகளால் நோயாளர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை; மருத்துவ அதிகாரிகள்

6 months ago
in செய்திகள்

தரமற்ற மருந்துகளால் நோயாளர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

சுகாதார துறையில் எழுந்துள்ள நெருக்கடிகள் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், தரமற்ற மருந்துகளால் நோயாளர்கள் உயிரிழந்தமையால் மருத்துவமனைக் கட்டமைப்பில் பணியாற்றும் மருத்துவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

நோயாளர்களுக்கான மருந்துகளைப் பரிந்துரைக்கும் போது அதன் தரம் தொடர்பில் இரு முறை சிந்திக்க வேண்டியுள்ளது.

மருந்துகளின் தரம் தொடர்பான கருத்துகளை அரச தரப்பு தவிர்த்து வருகிறது. பொறுப்புக் கூறலிலிருந்தும் விலகியுள்ளது.

நாட்டிலிருந்து பெருமளவான மருத்துவர்கள் வெளியேறியுள்ள நிலையில் மருத்துவமனைகளிலும் பெரும் வெற்றிடம் உருவாகியுள்ள போதும் மருத்துவர்களுக்கான நியமனங்களை வழங்குவதிலும் கால தாமதத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

மருத்துவர் பற்றாக்குறை உள்ள போதும் சகல மருத்துவமனைகளிலும் நோயாளிகளை கருத்தில் கொண்டு சிகிச்சை சேவைகள் வழங்கப்படுகின்றன.

இந்த நெருக்கடிகளுக்குத் தீர்வாக மருத்துவர்களை நாட்டில் தக்கவைத்துக் கொள்ள ‘இலங்கை விசேட மருத்துவ சேவை’ என்ற புதிய கட்டமைப்பை உருவாக்குமாறு நாம் முன்வைத்த யோசனையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது.

இது தொடர்பான கொடுப்பனவுகள் மற்றும் வசதிகள் குறித்து ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சருடன் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன.

எனினும் செயல்பாட்டு ரீதியான எந்த முன்னேற்றங்களையும் நாம் காணவில்லை.- என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இந்தியாவில் இருந்து பாதுகாப்பு ஸ்டிக்கர்கள்; மாலபே போலி மதுபான வலையமைப்பு அம்பலம்!
செய்திகள்

இந்தியாவில் இருந்து பாதுகாப்பு ஸ்டிக்கர்கள்; மாலபே போலி மதுபான வலையமைப்பு அம்பலம்!

July 9, 2026
சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து இலங்கை பொலிஸார் அவசர எச்சரிக்கை!
செய்திகள்

சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து இலங்கை பொலிஸார் அவசர எச்சரிக்கை!

July 9, 2026
நீர்கொழும்பு சிறை மோதல்; 24 பேரின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியீடு!
செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல்; 24 பேரின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியீடு!

July 9, 2026
ஆரையம்பதி வாள்வெட்டு சம்பவம்; தலைமறைவில் இருந்த இருவர் 3 வாள்களுடன் கைது!
செய்திகள்

ஆரையம்பதி வாள்வெட்டு சம்பவம்; தலைமறைவில் இருந்த இருவர் 3 வாள்களுடன் கைது!

July 9, 2026
பெண் கான்ஸ்டபிளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த OIC!
செய்திகள்

பெண் கான்ஸ்டபிளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த OIC!

July 9, 2026
13 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்; 32 பேரின் பாலியல் வன்கொடுமைக்கு பின் சிறுமி உயிரிழப்பு!
செய்திகள்

13 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்; 32 பேரின் பாலியல் வன்கொடுமைக்கு பின் சிறுமி உயிரிழப்பு!

July 9, 2026
Next Post
புதிய ஆண்டு, புதிய தொடக்கம்; தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்துக்கு மாணவர்கள் இணைவு

புதிய ஆண்டு, புதிய தொடக்கம்; தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்துக்கு மாணவர்கள் இணைவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.