வெனிசியூலா ஜனாதிபதி மதுரோவை உடனடியாக விடுதலை செய்யுமாறு , வெனிசியூலா தலைநகர் கராகஸில் 2000ஆயிரத்துக்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் , போதை பயங்கரவாதம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக , வெனிசியூலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப்படை அதிரடியாக கைது செய்ததையடுத்து அவரது மகன் மதுரோ குரேரா போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தார் .
இந்த சூழலில் , வெனிசியூலா தலைநகர் கராகஸில் 2000ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுரோவின் ஆதரவாளர்கள் ஒன்றுகூடி மதுரோவையும் , அவரது மனைவியையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரோவின் மகன் மதுரோ குரேரா சமூக வலைதளத்தில் குரல் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் .
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ஆளும் இயக்கத்திற்குள் துரோகம் ஏற்பட வாய்ப்புள்ளது . வரலாறு பொறுப்பானவர்களை அம்பலப்படுத்தும். துரோகிகள் யார் என்பதை வரலாறு சொல்லும் . நாம் அதை பார்ப்போம் என்றார்.








