Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரானில் நாடு முழுவதும் இணைய சேவை முற்றாக துண்டிப்பு; போராட்டங்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை

ஈரானில் நாடு முழுவதும் இணைய சேவை முற்றாக துண்டிப்பு; போராட்டங்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை

7 months ago
in உலக செய்திகள், செய்திகள்

ஈரானில் நாடு முழுவதும் இணைய சேவை முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதாக ஆன்லைன் கண்காணிப்பு அமைப்பான நெட்புளொக்ஸ் தெரிவித்துள்ளது.

ஈரானில் மோசமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியை எதிர்த்து நடைபெறும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இவ்வாறு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில், நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தொடர் டிஜிட்டல் தணிக்கை நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இந்த இணையத் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக நெட்புளொக்ஸ் குறிப்பிட்டது.

இது, மிக முக்கியமான தருணத்தில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் உரிமையை கடுமையாக பாதிப்பதாகவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

கடந்த டிசம்பர் இறுதியில் இருந்து, வாழ்க்கைச் செலவு கடுமையாக உயர்ந்ததும், உள்ளூர் நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததையும் எதிர்த்து, ஈரானின் பல நகரங்களில் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளூர் ஊடகங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்களை மேற்கோள் காட்டி வெளியிட்ட கணக்கெடுப்பின் படி, இந்த போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து பாதுகாப்புப் படையினரைச் சேர்த்து குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

தலைநகரம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் குவிந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டெஹ்ரானின் பல பகுதிகளில் மக்கள் வீதிகளில் இறங்கினர். நகர மையத்திலிருந்து பயணம் செய்தபோது பல சாலைகள் மறிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

போராட்டக்காரர்கள் மற்றும் பொலிஸார் இடையே மோதல்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கலகங்களில் ஈடுபடுவோருக்கு உரிய பதில் வழஙக்ப்படும் எனவும் போராட்டக்காரர்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவுடன் செயல்படுவதாகவும் ஈரான் அரச தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

“பாதுகாப்பின்மையை உருவாக்க யாராவது முயன்றால், அவர்களுக்கு எந்த விதமான தளர்வும் வழங்கப்படமாட்டாது,” என தலைமை நீதிபதி கோலாம்-ஹொசைன் மொஹ்சேனி-எஜெயி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கருத்து வெளிப்பாடு, சங்கம் அமைத்தல் மற்றும் அமைதியான பேரணிகளில் ஈடுபடுதல் ஆகிய அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரானுக்கு எதிராக மேலும் தாக்குதல் நடத்தத் திட்டம்; டிரம்ப் எச்சரிக்கை!
உலக செய்திகள்

ஈரானுக்கு எதிராக மேலும் தாக்குதல் நடத்தத் திட்டம்; டிரம்ப் எச்சரிக்கை!

August 1, 2026
பொதுநலவாய விளையாட்டில் இலங்கைக்கு தங்கம்; ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க பத்திரகே வரலாற்றுச் சாதனை
செய்திகள்

பொதுநலவாய விளையாட்டில் இலங்கைக்கு தங்கம்; ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க பத்திரகே வரலாற்றுச் சாதனை

August 1, 2026
2025 உயர்தர பரீட்சையின் முடிவுகள்! பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!
செய்திகள்

2025 உயர்தர பரீட்சையின் முடிவுகள்! பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

August 1, 2026
யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!
செய்திகள்

யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!

July 31, 2026
ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!
செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!

July 31, 2026
சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!
செய்திகள்

சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

July 31, 2026
Next Post
கஞ்சா, ஐஸ், பாபுல், ஹெரோயின் பயன்படுத்தும் பொது போக்குவரத்து சாரதிகள் இனி தப்ப முடியாது

கஞ்சா, ஐஸ், பாபுல், ஹெரோயின் பயன்படுத்தும் பொது போக்குவரத்து சாரதிகள் இனி தப்ப முடியாது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.