தெஹிவளை, மெரைன் டிரைவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஹோட்டல் உரிமையாளர், களுபோவில மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார் .
தெஹிவளை பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
கொழும்பு, தெஹிவளை – மெரைன் ட்ரைவ் பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றின் உரிமையாளரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச்சூடு இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ள நிலையில், விருந்தகத்தின் உரிமையாளர் காயங்களுடன் களுபோவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.








