மேல் மாகாணத்திற்கு இன்று (14) இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் வகையில் கடும் மின்னல் தாக்கத்திற்கான சிவப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அந்தவகையில் கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சில மாகாணத்தின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளதோடு மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.








