இலங்கைப் பாராளுமன்றம் இன்று (20) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடி, அஸ்வெசும சமூக நலத்திட்டம் தொடர்பான விவாதம் ஆரம்பமானது.
எனினும், பாராளுமன்ற அமர்வு காலை 9.30 மணிக்கு ஆரம்பமான போதிலும், அதிகாரப்பூர்வ YouTube Live நேரலை ஒளிபரப்பில் ஒலி இல்லாமல் காட்சி மட்டும் ஒளிபரப்பானது. இதனால் நேரலை வழியாக அமர்வை பின்தொடர்ந்த பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா மற்றும் சிங்கள மொழி பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசிய விடயங்களும் ஒலி இல்லாமலேயே ஒளிபரப்பப்பட்டது.
சுமார் 30 நிமிடங்களுக்குப் பின்னர், ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டதையடுத்து, YouTube Live ஒளிபரப்பு ஒலியுடன் வழக்கமான முறையில் மீண்டும் தொடர்ந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை பாராளுமன்ற நிர்வாகம் அல்லது சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப பிரிவு தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியிடப்படவில்லை.








