முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று (27) காலை பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், தனிப்பட்ட காரணங்களால் இன்று FCIDயில் ஆஜராக முடியாது என தெரிவித்துள்ள ஷிரந்தி ராஜபக்ஷ, விசாரணைக்காக முன்னிலையாக இரண்டு வார கால அவகாசம் வழங்குமாறு கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று விசாரணைக்காக முன்னிலையாக வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்ட நிலையிலேயே, அவர் கால அவகாசம் கோரியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.








