இந்தியாவில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் சமூக வலைதளப் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்குச் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் நோக்கில் புதிய சட்டமூலம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய கூட்டணிக் கட்சி உறுப்பினரான பாராளுமன்ற உறுப்பினர் எல்.எஸ்.கே. தேவராலு இந்தத் தனிநபர் மசோதாவைத் தாக்கல் செய்துள்ளார். மெட்டா (பேஸ்புக், இன்ஸ்டாகிராம்) மற்றும் யூடியூப் போன்ற தளங்களுக்கு இந்தியா மிகப்பெரிய சந்தையாக விளங்கும் சூழலில், இந்தத் தீர்மானம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இது குறித்த வெளிநாட்டு ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
“நமது நாட்டுச் சிறுவர்கள் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி வருவது ஒருபுறமிருக்க, வெளிநாட்டுத் தளங்களுக்குத் தரவுகளை (Data) வழங்கும் உலகின் மிகப்பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இது ஆரோக்கியமானதல்ல.” என தெரிவித்தார்.
சமூக வலைதளங்கள் இளைஞர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து உலகளவில் பெரும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இத்தகையச் சூழலில், இந்தியாவின் இந்த முன்னெடுப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.








