வவுனியா, வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற சாலை விபத்தில், முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்திற்கு முன்பாக நேற்று இரவு சுமார் 8.40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் சாரதி மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு மதுபோதை பரிசோதனை மேற்கொள்வதற்காக பொலிஸார் கைது செய்து வவுனியா பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் குறுகிய நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பின்னர் நிலைமை வழமைக்குத் திரும்பியது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








