Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சைபர் தாக்குதல்களிலிருந்து அரச நிறுவனங்களைப் பாதுகாக்கப் புதிய திட்டம்!

சைபர் தாக்குதல்களிலிருந்து அரச நிறுவனங்களைப் பாதுகாக்கப் புதிய திட்டம்!

4 months ago
in செய்திகள்

நாட்டின் முன்னணி அரச நிறுவனங்களை தேசிய சைபர் பாதுகாப்பு நடவடிக்கை நிலையத்துடன் இணைப்பதற்கான அமைச்சரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கை CERT நிறுவனம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியவை இணைந்து இந்தக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தன. நவீன உலகில் சைபர் பாதுகாப்பு என்பது வெறும் தொழில்நுட்ப விடயம் மட்டுமல்ல, அது தேசிய பாதுகாப்பு, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கை ஆகியவற்றில் நேரடியாக தாக்கம் செலுத்தும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்பது இங்கு வலியுறுத்தப்பட்டது.

அத்துடன், தகவல் உட்கட்டமைப்பு வசதிகள் இயங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் சைபர் பாதுகாப்பு நடவடிக்கை நிலையம் ஊடாக அரசாங்கத்தின் முக்கிய தகவல்களுக்கான அணுகலை வழங்குவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இதற்கான கொள்கை ரீதியான முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதுடன், இவ்வருட இறுதிக்குள் ஏனைய அரச நிறுவனங்களையும் சைபர் பாதுகாப்பு நிலையத்துடன் இணைப்பதை இரண்டாம் கட்டமாக முன்னெடுப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதில் முன்னணி அரச நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதுடன், அந்த நிறுவனங்களை தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் மூலம் கணக்காய்வுக்கு உட்படுத்தவும் முன்மொழியப்பட்டது.

இதுதவிர, அனைத்து அரச அதிகாரிகளுக்கும் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வூட்ட வேண்டியதன் அவசியமும், அதற்கான பயிற்சித் திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில் சைபர் தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறனை அரச நிர்வாகம் மற்றும் சேவை வழங்கலின் அடிப்படை அம்சமாகக் கருத வேண்டும் என்றும், அரச இணையத்தளங்கள் முடக்கப்படுதல், ரான்சம்வேர் தாக்குதல்கள் மற்றும் தகவல் திருட்டு போன்ற சைபர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அத்தியாவசிய சேவைகள் சீர்குலைவதைத் தடுப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் இந்தப் புதிய முறைமை வாய்ப்பளிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டது.

தேசிய சைபர் பாதுகாப்பு நடவடிக்கை நிலையம் மூலம் அரச நிறுவனங்களுக்கு நிகழ்நேர அச்சுறுத்தல் கண்காணிப்பு, முன் எச்சரிக்கைகள் மற்றும் முறையான ஒருங்கிணைப்புடன் கூடிய பதிலளிப்பு வசதிகள் அளிக்கப்படுவதால், இது வெறும் இணக்கப்பாட்டுப் பயிற்சி மட்டுமல்லாது நிறுவன ரீதியான நம்பகத்தன்மைக்காகச் செய்யப்படும் ஒரு முதலீடாகவும் அறிமுகப்படுத்தப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்த சரத் பொன்சேகா!
செய்திகள்

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்த சரத் பொன்சேகா!

June 15, 2026
வாரத்தில் ஒரு நாள் மட்டுமே சட்டத்தரணி சந்திப்பு; சுரேஷ் சலேவுக்கு CID அனுமதி!
செய்திகள்

வாரத்தில் ஒரு நாள் மட்டுமே சட்டத்தரணி சந்திப்பு; சுரேஷ் சலேவுக்கு CID அனுமதி!

June 15, 2026
அர்ச்சுனா ஒரு ஜோக்கர் என்பதை தாண்டி அவர் மஹிந்தவின் ஆள்; இளங்குமரன்
அரசியல்

அர்ச்சுனா ஒரு ஜோக்கர் என்பதை தாண்டி அவர் மஹிந்தவின் ஆள்; இளங்குமரன்

June 15, 2026
40 இலட்சம் பேர் இதுவரை டின் இலக்கம் பெறவில்லை
செய்திகள்

40 இலட்சம் பேர் இதுவரை டின் இலக்கம் பெறவில்லை

June 15, 2026
வடக்கில் ராஜபக்ஷர்கள் மீண்டும் அதிகாரம் செலுத்துவார்கள்; அர்ச்சுனா இராமநாதன் ஊடாக பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன-ரோஹித அபேகுணவர்தன
அரசியல்

வடக்கில் ராஜபக்ஷர்கள் மீண்டும் அதிகாரம் செலுத்துவார்கள்; அர்ச்சுனா இராமநாதன் ஊடாக பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன-ரோஹித அபேகுணவர்தன

June 15, 2026
கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்
செய்திகள்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்

June 14, 2026
Next Post
மீனவர்களின் போராட்டத்தால் சந்தையில் மீன் விலை அதிகரிப்பு

மீனவர்களின் போராட்டத்தால் சந்தையில் மீன் விலை அதிகரிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.