வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் வசித்துவரும் 36 வயதுடைய ஆசிரியரான அன்ரனி ஜோய்என்பவரை கடந்த மூன்றுமாதங்களாக காணவில்லை என அவரது குடும்பத்தினர் ஓமந்தை காவல் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் வீட்டிலிருந்து பாடசாலைக்கு சென்ற அவர் மீண்டும் வீடுதிரும்பவில்லை என அவர்கள் தெரிவிப்பதுடன் அவரது தொலைபேசியும் இயங்குநிலையில் இல்லை என கூறப்படுகின்றது.
இதனையடுத்து அவரது குடும்பத்தினர் ஓமந்தை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளனர்.
எனினும் இன்றுவரை அவர் தொடர்பான எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் ஓமந்தை காவல் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு கூறப்பட்டுள்ளது.
அல்லது கீழேயுள்ள இலக்கங்களிற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவலை தெரிவிக்குமாறு அவரது குடும்பத்தினர் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
0777444117
0772011106
0743072802








