இலங்கையில் சாதாரண தர பரீட்சைகள் நடைபெற்று வரும் நிலையில், அதிகாலையில் ஆலயங்களில் ஒலிபெருக்கிகளில் ஒலிக்கும் பக்திப் பாடல்களின் சத்தத்தினால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அதிகாலை எழுந்தும் மற்றும் மாலையில் படிக்கும் மாணவர்கள் இதனால் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், இது அவர்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் உள்ள அனைத்து மத ஆலயங்களும் இது குறித்து கவனம் எடுக்கவேண்டும் என அன்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள் மற்றும் நாட்டின் எதிர்காலத் தூண்கள் ஆவர்!








