பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஆண்ட்ரூ (மவுண்ட்பேட்டன்-வின்ட்சர்) நேற்று முன்தினம் (19) காலை அதிரடியாகக் கைது செய்யப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது.
நிதி மோசடி மற்றும் பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் அவருக்கு இருந்த நீண்டகாலத் தொடர்பு மற்றும் பொதுப் பதவியில் இருந்தபோது செய்த முறைகேடுகள் (Misconduct in Public Office) ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் ஒரு மிக முக்கியமான செய்தியை உலகிற்குச் சொல்கிறது: “சட்டத்திற்கு மேலாக எவரும் இல்லை” (Nobody is above the law). பிரித்தானியாவின் சட்ட வரலாற்றில் இது ஒரு முக்கியத் திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. “அரசன் எவ்வழி, குடிகளும் அவ்வழி” என்ற காலம் மாறி, இன்று “சட்டம் எவ்வழி, அரசனும் அவ்வழி” என்ற நிலை உருவாகியுள்ளது.
எத்தகைய செல்வாக்கு மிக்கவராக இருந்தாலும், இழைக்கப்பட்ட குற்றங்களுக்குச் சட்டத்தின் முன் பதில் சொல்லியாக வேண்டும் என்பதே நீதியின் அடிப்படைத் தர்மத்தை இங்கிலாந்து நீதித்துறை நிலைநாட்டியுள்ளது.








