Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இளம் பெண்களை வட்ஸ்அப் ஊடாக பாலியல் அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது!

இளம் பெண்களை வட்ஸ்அப் ஊடாக பாலியல் அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது!

3 months ago
in செய்திகள்

இளம் பெண்களின் அலைபேசிகளைச் சட்டவிரோதமாக ஊடுருவி, அவர்களை மிரட்டி நிர்வாண காணொளிகளைக் கோரி வந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞரை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ்.போதரகம உத்தரவிட்டார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், நீதிமன்றத்தில் நேற்று(25) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது பொலிஸ் உதவிப் பரிசோதகர் நீதிமன்றத்தில் முன்வைத்த தகவல்கள் வருமாறு:- சந்தேகநபர் கடந்த மூன்று வருடங்களாகப் போலி இணைய இணைப்புகளைப் பயன்படுத்தி இளம் பெண்களின் அலைபேசிகளுக்குள் ஊடுருவியுள்ளார்.

அங்கிருந்து பெண்களின் அந்தரங்கத் தரவுகளைத் தரவிறக்கம் செய்ததோடு, வட்ஸ்அப் ஊடாகத் தொடர்புகொண்டு மேலதிக நிர்வாண காணொளிகளைக் கோரி மிரட்டியுள்ளார்.

தனது கோரிக்கைக்கு இணங்காவிட்டால், தன்னிடம் உள்ள காணொளிகளை இணையத்தில் கசியவிடுவதாகவும் அவர் அச்சுறுத்தியுள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு களுத்துறை மற்றும் பாணந்துறை பகுதிகளைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

சந்தேகநபர் தனது அடையாளத்தை மறைக்க ‘கண்டறிய முடியாத’ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திய போதிலும், நீதிமன்ற உத்தரவின் பேரில் ‘பேஸ்புக்’ நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரின் மனநிலை குறித்து முழுமையான மருத்துவ அறிக்கையைப் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிவான் இதன்போது உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவம் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தும் இளம் பெண்கள் மத்தியில் மிகுந்த எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை

June 6, 2026
பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது
செய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

June 6, 2026
மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
செய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

June 6, 2026
புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

June 6, 2026
Next Post
வீரர்களும் பயிற்சியாளர்களும் மாறுவதை விட ஊழல் நிறைந்த இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் முதலில் மாறவேண்டும்; முத்தையா முரளிதரன்

வீரர்களும் பயிற்சியாளர்களும் மாறுவதை விட ஊழல் நிறைந்த இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் முதலில் மாறவேண்டும்; முத்தையா முரளிதரன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.