“சுரேஷ் சலேயின் கைதானது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தவறாக வழிநடத்தப்பட்ட மத மூடவெறியர் சிலர் தங்களைத் தாங்களே வெடிக்கச் செய்த ஒரு சாதாரண சம்பவம் மட்டுமல்ல என்பதை வெளிப்படுத்துகிறது.
மாறாக, அந்த மத மூடநம்பிக்கையை அரசியல் இலாபத்துக்காக திட்டமிட்டு பயன்படுத்திய சதித்திட்டம் என்ற பகிரங்க இரகசியத்துக்கு இது உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தலாகும்.
ஆகவே, அந்த அரசியல் சதியால் பயன் பெற்றவர்கள் கவலை வெளியிடுவது இயல்பானதே.!
இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.








