சமகால அரசியல் மற்றும் போர் நிலைமைகள் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் கீழ்கண்டவாறு ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
“தற்போது ஈரான், அமரிக்க நாடுகளுக்கு இடையிலான பாரிய மோதல் இடம்பெற்றுக்கொண்டுள்ளது.
இந்த இருநாடுகள் மொதலில் அமரிக்காவுக்கு ஆதரவாக இஸ்ரேல்,மத்தியகிழ்கு உட்பட சிலநாடுகளும் ,
ஈரானுக்கு ஆதரவாக சீனா, ரஷ்யா உட்பட சிலநாடுகளும் ஆதரவாக உள்ளன.
இலங்கையில் உள்ள சிங்கள, முஷ்லிம் தலைவர்கள் பலர் ஈரானுக்கு ஆதரவாகவும், அமரிக்கா, இஸ்ரவேலுக்கு எதிராகவும் கருத்துக்களை கூறியுள்ளனர்.
குறிப்பாக முன்னாள் ஜனாதிபதிகளான இனப்படுகொலையாளர்களான மகிந்த, ரணில், மற்றும் மகிந்தவின் மகன் நாமல் மற்றும் ஶ்ரீலங்கா முஷ்லிம் காங்கிரஷ் தலைவர் ஹக்கீம், இலங்கை மக்கள் காங்கிரஷ் தலைவர் றிசாட் பதியுதீன் இப்படி சிலர்.
எதிர்கட்சி தலைவர் சஜீத் கழுவுற மீனில் நழுவுற மாதிரி இரண்டு நாடுகளை பற்றி ஆதரவோ, எதிர்ப்போ இன்றி மத்திய கிழக்கில் பணிபுரியும் இலங்கையர் தொடர்பாக ஆராய்வதற்கு அனைத்து கட்சி கூட்டம் நடத்த அழைப்புமட்டும் இப்போது விட்டுள்ளார்.
ஈரான் தலைவர்களின் மறைவுக்கு இலங்கை அரசு அதிகாரப்பூர்வ
அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இரங்கல் தெரிவித்தார் ஜனாதிபதி அநுர இதுவரை எந்த கருத்தும் இதுவரை கூறவில்லை.

இந்த உலக வல்லரசுகளின் போர் தொடர்பாக ஈழத்தமிழர்கள் அறியவேண்டியது, அல்லது சிந்திக்க வேண்டியது கடந்த 2006, இறுதி யுத்த காலத்தில் இலங்கைக்கு ஆதரவாக முள்ளிவாய்க்கால் இறுதியுத்தத்தில் 2009,மே,18, வரை இனப்படுகொலைக்கு உதவிய முக்கிய நாடுகளே எதிரும் புதிருமாக மோதுகின்றனர் இதில் எந்த நாடுகளும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படவில்லை, மாறாக இராணுவ, போர்தளபாட, விமான, தடைசெய்யப்பட்ட குண்டுகள், போரியல் திட்டங்கள் எல்லாமே இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட நாடுகள்தான்.
அதில் முக்கிய நாடுகள் இவை:
- 🇮🇳 -இந்தியா,(India)
- 🇵🇰 -பாகிஷத்தான்,(Pakistan)
- 🇨🇳 -சீனா, (China)
- 🇮🇱 -இஷ்ரேல்,(Israel)
- 🇺🇸 -அமரிக்கா,(United States)
- 🇬🇧 -லண்டன்,(United Kingdom)
- 🇷🇺-ரஷ்யா, (Russia)
- 🇮🇷 -ஈரான்,(Iran)
- 🇺🇦 -உக்ரைன் (Ukraine)
10.🇨🇿 -செக்குடியரசு,(Czech Republic)
11.🏴☠️-மத்தியகிழக்கு நாடுகள்(Middle East Countries)
இன்று தமக்குள் மோதி அழிந்துகொண்டிருக்கின்றார்கள்.
சர்வதேச நீதிமன்றம், ஐ. நா சபை ஈழத்தமிழர்களுக்கு இதுவரை எந்த நீதியையும் வழங்க மறுத்தனர் இன்று அவர்களுக்குள்ளே நீதியையும், தண்டனைகளையும் இறைவனால் வழங்கிக்கொண்டிருக்கின்றது.
எனவே நாம் யாரையும் ஆதரிக்கவோ, யாரையும் எதிர்கவோ தேவையில்லை எல்லாநாடுகளும் முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு இலங்கைக்கு உதவிய நாடுகள்தான் என்பதை புரிவது நல்லது..!””








