மத்துகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து இனம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
நேற்று இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், வீட்டின் ஜன்னல்கள் மற்றும் சுவர்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் வீட்டிலிருந்த எவருக்கும் காயங்களோ அல்லது உயிர் ஆபத்தோ ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த மத்துகம பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.








