Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போர் பதற்றம் காரணமாக சர்வதேச கடலில் மீன்பிடி செய்ய வேண்டாம்; மீனவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

போர் பதற்றம் காரணமாக சர்வதேச கடலில் மீன்பிடி செய்ய வேண்டாம்; மீனவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

5 months ago
in செய்திகள்

இலங்கை கடற்பரப்பை மீறி சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை கடற்றொழிலாளர்களிடம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்க சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) வலியுறுத்தியுள்ளார்.

வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல் சூழலைக் கருதி கடற்றொழில் அமைச்சர் நாடாளுமன்றில் இந்த அறிவிப்பை இன்று (5) வெளியிட்டுள்ளார்.

இதேவேளை வளைகுடா பிராந்தியத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் போர் பதற்றத்தை கருத்தில் கொண்டு, சர்வதேச கடற்பரப்பில் கடற்றொழில் ஈடுபடும் இலங்கை பல்தினம் கொண்ட மீன்பிடிப் படகுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கடற்றொழில் திணைக்களம் விசேட அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த இது தொடர்பாக விடுத்துள்ள அறிவிப்பில், கடற்றொழிலாளர்கள் கண்டிப்பாகத் தங்களின் பாரம்பரிய கடற்றொழில் எல்லைகளுக்குள் மாத்திரம் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அறிமுகமில்லாத கப்பல்கள் அல்லது இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் கப்பல்களை நோக்கி நகர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடலில் இருக்கும் போது ஏனைய கப்பல்களுடன் பொருட்களைப் பரிமாற்றிக் கொள்வதையோ அல்லது எந்தவொரு கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதையோ முற்றிலும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடற்றொழிலுக்குச் செல்லும் போதும் அல்லது கரைக்குத் திரும்பும் போதும் வழமையாகப் பயன்படுத்தப்படும் கடல் வழிப் பாதைகளையே பின்பற்றுமாறு கடற்றொழிலாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல் சூழலால் இதுவரை இலங்கை கடற்றொழில் படகுகள் எதற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என கடற்றொழில் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நீர்கொழும்பு சிறைக் கலவரம்; உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு கோரிக்கை!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைக் கலவரம்; உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு கோரிக்கை!

July 22, 2026
புதையல் வேட்டையில் சிக்கிய 5 பேர்; முன்னாள் அமைச்சரின் மகனும் கைது!
செய்திகள்

புதையல் வேட்டையில் சிக்கிய 5 பேர்; முன்னாள் அமைச்சரின் மகனும் கைது!

July 22, 2026
இலங்கையின் முதல் ‘கால்வாய் சூரிய சக்தி’ திட்டம்!
செய்திகள்

இலங்கையின் முதல் ‘கால்வாய் சூரிய சக்தி’ திட்டம்!

July 22, 2026
‘டித்வா’ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைத் துறைக்கு விசேட அவசர நிவாரணத் திட்டம்!
செய்திகள்

‘டித்வா’ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைத் துறைக்கு விசேட அவசர நிவாரணத் திட்டம்!

July 22, 2026
தேவேந்திரமுனையில் மீனவர் வீட்டை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு!
செய்திகள்

தேவேந்திரமுனையில் மீனவர் வீட்டை இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு!

July 22, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!

July 21, 2026
Next Post
மத்திய கிழக்கு பதற்றம்; வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி விசேட கவனம்!

மத்திய கிழக்கு பதற்றம்; வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி விசேட கவனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.