ஈராக் எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் நங்கூரமிடப்பட்டிருந்த Zefyros, Safesea vishnu ஆகிய இரு வெளிநாட்டு எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதற்கு உத்தியோகப்பூர்வதாக ஈரான் பொறுப்பேற்றுள்ளது.
தீப்பற்றி எரிந்த குறித்த கப்பல்களிலிருந்து 38 ஊழியர்கள் எதுவித பிரச்சினையுமின்றி மீட்கப்பட்டதாக ஈராக் துறைமுக நிறுவன தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த கப்பலானது அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட நிறுவளனத்துக்கு சொந்தமானதாகும்.
நீருக்கடியில் இயங்கும் ட்ரோன் மூலம் பாரசீக வளைகுடாவில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் தகர்க்கப்பட்டன என ஈரான் தெரிவித்துள்ளது.
தாக்குதலை அடுத்து ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு காரணமாக தீ பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இச் சம்பவத்தைத் தொடர்ந்து எண்ணெய் துறைமுகங்களின் செயல்பாடுகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.








