இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்துடன் தொலைபேசியில் பேசிய ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்ச்சி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய “இராணுவ ஆக்கிரமிப்பு” குறித்து உரையாடினார்.
“அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய ஆட்சி ஈரானுக்கு எதிரான இராணுவ ஆக்கிரமிப்பின் விளைவாக ஏற்பட்ட சமீபத்திய நிலைமையை” அரக்ச்சி கோடிட்டுக் காட்டினார் என இலங்கை வெளியுறவு அமைச்சு கூறியது.
மார்ச் 4 ஆம் திகதி அமெரிக்கத் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரானியக் கப்பலான டெனாவின் பணியாளர்களை மீட்க உதவியதற்கும், கப்பலின் டார்பிடோ தாக்குதலில் கொல்லப்பட்ட 84 மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்ப உதவியதற்கும் அவர் இலங்கைக்கு நன்றி தெரிவித்தார்.
தாக்குதலுக்குப் பிறகு மீட்கப்பட்ட உயிர் பிழைத்த ஈரானிய மாலுமிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று அமெரிக்கா இலங்கையை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.








