ஈரானால் முடக்கப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் பாதுகாப்பாகத் திறப்பதற்கு, அமெரிக்காவுடன் இணைந்து கப்பல்களை அனுப்பி ஒத்துழைக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
இது குறித்து தனது ட்ரூத் சோசியல் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஈரான் இந்த வழியை மூட முயன்ற போதிலும், ஏதோ ஒரு வழியில் ஹோர்முஸ் நீரிணையை விரைவில் பாதுகாப்பானதாகவும், சுதந்திரமானதாகவும் திறப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஹோர்முஸ் நீரிணை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

உலகின் மொத்த மசகு எண்ணெய் விநியோகத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்தப் பாதை ஊடாகவே நடைபெறுகிறது.
இந்தப் பாதை முடக்கப்படுவது உலகளாவிய எரிபொருள் விலையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவர், இந்த நீரிணையைத் தொடர்ந்து முடக்கி வைக்கப்போவதாக சபதம் செய்துள்ளார்.
இந்தநிலையிலயே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.








