இலங்கை கிரிக்கெட் நடுவர் குமார் தர்மசேனவுக்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முறைப்பாடு ஒன்று அளித்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது, வழங்கப்பட்ட கால அவகாசம் முடிந்த பின்னரும் பங்களாதேஷ் அணி மூன்றாவது நடுவரிடம் மதிப்பாய்வு செய்ய குமார் தர்மசேன அனுமதித்தார் என்று குற்றம் சுமத்தி இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.








