ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) உள்நாட்டுப் பாதுகாப்பு துணை இராணுவப் பிரிவான பசிஜ் பிரிவின் தளபதியைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.
“இராணுவப் புலனாய்வுத் துறையின் துல்லியமான உளவுத் தகவலின் வழிகாட்டுதலின்படி, விமானப்படை நேற்று தெஹ்ரானின் மையப்பகுதியில் ஒரு தாக்குதலை நடத்தியது. இதில், கடந்த ஆறு ஆண்டுகளாக பசிஜ் பிரிவின் தளபதியாக இருந்த குலாம் ரெசா சுலைமானி கொல்லப்பட்டார்,” என்று அது கூறியது.
இந்தக் கூற்றை ஈரான் உறுதிப்படுத்தவில்லை.
இது உறுதி செய்யப்பட்டால், பெப்ரவரி 28 போரின் முதல் நாளிலேயே, முன்னாள் உச்ச தலைவர் அலி கொமெய்னி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரைக் கொன்ற அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பிறகு, இந்தப் போரில் நிகழும் மிக உயர்ந்த மட்டத்திலான படுகொலையாக சுலைமானியின் படுகொலை இருக்கும்.
அதேசமயம் படுகொலை செய்யப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவிப்பு விடுத்த சில மணி நேரங்களிலேயே லாரிஜானியின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்று இடப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய இராணுவம் கொன்றுவிட்டதாகக் கூறும் ஈரானின் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரி லாரிஜானியின் கையெழுத்துக் குறிப்பு ஒன்று அவரது எக்ஸ் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது.
இருப்பினும், ஈரானின் அரச தரப்பிலிருந்து இதற்கு எந்த உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை.
ஈரானிய அரசுடன் தொடர்புடைய ஊடகங்களாலும் பகிரப்பட்ட இந்தக் குறிப்பில், சமீபத்திய அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானிய மாலுமிகளை நினைவுகூர்கிறது எனவும், அவர்களின் இறுதிச் சடங்கு தொடர்பிலும் குறிப்பிடும் வகையில் எழுதப்பட்டுள்ளது.








