மகிந்தராஜபக்ஷ அரசாங்கத்தின் உண்மைகளை வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டது போன்ற அதே சட்டத்தை அந்த கட்சி அரசியலில் இருந்து வந்த இரா.சாணக்கியன் இன்று வடகிழக்கில் உள்ள தமிழ் இளைஞர்களுக்கு எதிராக கொண்டுவந்து வழக்கு தொடர்ந்து, தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றார். எனவே நீதிமன்றத்தில் நிறுத்துகின்ற இவருக்கு எதிர்வரும் தேர்தலில் இளைஞர் யுவதிகள் பாடம் புகட்டவேண்டும் என ஈ.பி.டி.பி கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேசத்திலுள்ள அவரது காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை (18) இடம்பெற்று ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,








