நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையை முன்னிட்டு, பல முன்னணி வங்கிகள் தங்களின் கிளை சேவை நேரங்களில் தற்காலிக மாற்றங்களை அறிவித்துள்ளன.
Commercial Bank வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 2026 மார்ச் 18 முதல் மறு அறிவிப்பு வரும்வரை ஒவ்வொரு புதன்கிழமையும் கிளைகள் குறைந்த நேரத்தில் செயல்படும்.
மினிகொம் மற்றும் சுப்பர் மார்க்கெட் கிளைகள் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை இயங்கும்.
மற்ற கிளைகள் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை மட்டுமே சேவை வழங்கும்.
Seylan Bank அறிவிப்பில், அதே காலப்பகுதியில் ஒவ்வொரு புதன்கிழமையும் அனைத்து கிளைகளும் காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் 24 மணி நேர டிஜிட்டல் வங்கிச் சேவைகளை பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
DFCC Bank கூட இதேபோன்ற சேவை நேர மாற்றத்தை அறிவித்துள்ளது. புதன்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மட்டுமே கிளைகள் திறந்திருக்கும். DFCC ONE மொபைல் செயலி மற்றும் இணைய வங்கி சேவைகள் மூலம் எப்போது வேண்டுமானாலும் சேவைகளை பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
NDB Bank அறிவிப்பின்படி, 2026 மார்ச் 18 முதல் மறு அறிவிப்பு வரும்வரை ஒவ்வொரு புதன்கிழமையும் அனைத்து கிளைகளும் காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மட்டுப்படுத்தப்பட்ட நேரத்தில் இயங்கும்.
இதேவேளை, Hatton National Bank (HNB) வெளியிட்டுள்ள அறிவிப்பிலும், நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு ஒவ்வொரு புதன்கிழமையும் கிளை சேவை நேரம் காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மட்டுமே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் மொபைல் மற்றும் ஆன்லைன் வங்கிச் சேவைகளை பயன்படுத்துமாறும் வங்கி அறிவுறுத்தியுள்ளது.








