Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடத்தி கிணற்றில் வீசப்பட்ட பெண் உயிருடன் மீட்பு; உள்ளே மற்றொரு சடலம் – மட்டக்களப்பில் சம்பவம்!

கடத்தி கிணற்றில் வீசப்பட்ட பெண் உயிருடன் மீட்பு; உள்ளே மற்றொரு சடலம் – மட்டக்களப்பில் சம்பவம்!

4 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொத்தியாபுலையில் நேற்றைய தினம் (19) காணாமல் போன பெண் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பிரதேசத்தில் அமைந்துள்ள பொதுக் கிணற்றினுள் இருந்து குத்துயிராக மீட்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (20) காலை குறித்த பகுதியினூடாக பால்பண்ணைக்குச் செல்லும் சிலர் குறித்த பொதுக் கிணற்றினுள் இருந்து அலறல் சத்தம் வருவதைக் கேட்டு அங்கு சென்று பார்த்தபோது, பெண் ஒருவர் கழுத்தளவு நீரில் அரைஉயிரில் கிடப்பதை அவதானித்து பொலிஸ் அவசர பிரிவிற்குத் தகவல் வழங்கியதையடுத்து அப்பகுதிக்கு வந்த கொக்கட்டிச்சோலைப் பொலிசாரினால் குறித்த பெண் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்பெண் வழங்கிய தகவலின் அடிப்படையில், குறித்த கிணற்றினுள் இன்னுமொரு சடலம் இருப்பதும் அறியப்பட்டு, குறித்த சடலத்தை மீட்கும் நடவடிக்கை பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முதற்கட்ட விசாரணையில் மீட்கப்பட்ட பெண் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் கொத்தியாபுலையில் வைத்து தான் கடத்தப்பட்டு தாக்கப்பட்டு குறித்த கிணற்றினுள் போடப்பட்டதாகவும், கிணற்றினுள் இன்னுமொருவரின் சடலம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் கொக்கட்டிச்சோலைப் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையில் கிணற்றினுள் இருக்கும் மற்றுமொரு சடலம் கடந்த மாதம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாற்பது வட்டை பகுதியில் காணாமல் போன பெண் என சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கொக்கட்டிச்சோலைப் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!
செய்திகள்

நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!

July 24, 2026
வடக்கு சொகுசு பேருந்து சேவை தொடர்பில் பயணிகள் வாட்சப்பில் முறைப்பாடு செய்யலாம்
செய்திகள்

வடக்கு சொகுசு பேருந்து சேவை தொடர்பில் பயணிகள் வாட்சப்பில் முறைப்பாடு செய்யலாம்

July 24, 2026
மட்டக்களப்பு வாவிக்கரையில் வெற்றிகரமாக நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம்
செய்திகள்

மட்டக்களப்பு வாவிக்கரையில் வெற்றிகரமாக நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம்

July 24, 2026
லண்டனில் தமிழர்களுக்கு நீதி கோரி கறுப்பு ஜூலை நினைவேந்தல் போராட்டம்!
உலக செய்திகள்

லண்டனில் தமிழர்களுக்கு நீதி கோரி கறுப்பு ஜூலை நினைவேந்தல் போராட்டம்!

July 24, 2026
பிள்ளையானுக்கு 4ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு
செய்திகள்

பிள்ளையானுக்கு 4ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு

July 24, 2026
பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு
செய்திகள்

பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு

July 24, 2026
Next Post
மட்டக்களப்பில் அன்னை பூபதியின் 38வது ஆண்டு நினவேந்தலை ஆரம்பித்த தாயக செயலணி

மட்டக்களப்பில் அன்னை பூபதியின் 38வது ஆண்டு நினவேந்தலை ஆரம்பித்த தாயக செயலணி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.