Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போத்தல் குடிநீரின் விலையை உயர்த்த உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

போத்தல் குடிநீரின் விலையை உயர்த்த உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

3 months ago
in செய்திகள்

போத்தலில் அடைக்கப்பட்ட நீரின் விலையை உயர்த்துவதறகு அனுமதி அளிக்குமாறு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளிட்ட உற்பத்தி மூலப்பொருட்களின் விலை தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் தொழிலை தொடர்ந்து நடத்துவது கடினமாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சந்தையில் விற்கப்படும் போத்தல் குடிநீரின் விலையை உயர்த்த அனுமதி வழங்குமாறு உற்பத்தியாளர் சங்கங்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய மாகாண இயற்கை நீர் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்ட நாடு முழுவதும் செயல்படும் உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கலந்துரையாடலில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி துஷார ரணதுங்க தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், குடிநீர் போத்தல்களின் விலை உயர்வு தொடர்பான தொழில்துறை சவால்கள் விரிவாக ஆராயப்பட்டன.

இதன்படி, தற்போது 70 ரூபாவிற்கு விற்கப்படும் 500 மில்லிலிட்டர் போத்தலை 90 ரூபாவாகவும், 100 ரூபாவிற்கு விற்கப்படும் 1 லிட்டர் போத்தலை 130 ரூபாவாகவும், 130 ரூபாவிற்கு விற்கப்படும் 1500 மில்லிலிட்டர் போத்தலை 160 ரூபாவாகவும், 5 லிட்டர் போத்தலை 350 ரூபாவிலிருந்து 450 ரூபாவாகவும் உயர்த்த அனுமதி வழங்குமாறு உற்பத்தியாளர்கள் கோரியுள்ளனர்.

எரிபொருள் விலை உயர்வின் காரணமாக அனைத்து மூலப்பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால், தொழிலை தொடர்ந்து நடத்துவதற்கு பெரும் சவால் உருவாகியுள்ளது என மத்திய மாகாண இயற்கை நீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சபுமல் குமார தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த நுகர்வோர் விவகார சபை கவுன்சில் தலைவர் சட்டத்தரணி துஷார ரணதுங்க, துறைசார் அமைச்சரிடம் விவரங்களை சமர்ப்பித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி புதைகுழியில் மேலும் 14 என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி புதைகுழியில் மேலும் 14 என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

June 17, 2026
எரிபொருள் விலை எப்போது குறையும்? பதிலளித்தார் அனில் ஜயந்த!
செய்திகள்

எரிபொருள் விலை எப்போது குறையும்? பதிலளித்தார் அனில் ஜயந்த!

June 17, 2026
திருமண மண்டபத்தில் மோதல்; பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது!
செய்திகள்

திருமண மண்டபத்தில் மோதல்; பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது!

June 17, 2026
ஈரான் மீள்கட்டமைப்புக்கு 300 பில்லியன் டொலர் முதலீட்டு நிதி!
உலக செய்திகள்

ஈரான் மீள்கட்டமைப்புக்கு 300 பில்லியன் டொலர் முதலீட்டு நிதி!

June 17, 2026
அஸ்வெசும் பயனாளிகளுக்கு ஜூன் மாத கொடுப்பனவு நாளை வங்கி கணக்குகளில்!
செய்திகள்

அஸ்வெசும் பயனாளிகளுக்கு ஜூன் மாத கொடுப்பனவு நாளை வங்கி கணக்குகளில்!

June 17, 2026
கண்டி – தெல்தெனியாவில் காரிலிருந்து பெண் சடலம் மீட்பு; விசாரணை ஆரம்பம்!
செய்திகள்

கண்டி – தெல்தெனியாவில் காரிலிருந்து பெண் சடலம் மீட்பு; விசாரணை ஆரம்பம்!

June 17, 2026
Next Post
கஹவத்தையில் காணாமல் போன இரத்தினக்கல் வியாபாரி சடலமாக மீட்பு!

கஹவத்தையில் காணாமல் போன இரத்தினக்கல் வியாபாரி சடலமாக மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.