Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போத்தல் குடிநீரின் விலையை உயர்த்த உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

போத்தல் குடிநீரின் விலையை உயர்த்த உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

4 months ago
in செய்திகள்

போத்தலில் அடைக்கப்பட்ட நீரின் விலையை உயர்த்துவதறகு அனுமதி அளிக்குமாறு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளிட்ட உற்பத்தி மூலப்பொருட்களின் விலை தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதால் தொழிலை தொடர்ந்து நடத்துவது கடினமாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சந்தையில் விற்கப்படும் போத்தல் குடிநீரின் விலையை உயர்த்த அனுமதி வழங்குமாறு உற்பத்தியாளர் சங்கங்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய மாகாண இயற்கை நீர் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்ட நாடு முழுவதும் செயல்படும் உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கலந்துரையாடலில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி துஷார ரணதுங்க தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், குடிநீர் போத்தல்களின் விலை உயர்வு தொடர்பான தொழில்துறை சவால்கள் விரிவாக ஆராயப்பட்டன.

இதன்படி, தற்போது 70 ரூபாவிற்கு விற்கப்படும் 500 மில்லிலிட்டர் போத்தலை 90 ரூபாவாகவும், 100 ரூபாவிற்கு விற்கப்படும் 1 லிட்டர் போத்தலை 130 ரூபாவாகவும், 130 ரூபாவிற்கு விற்கப்படும் 1500 மில்லிலிட்டர் போத்தலை 160 ரூபாவாகவும், 5 லிட்டர் போத்தலை 350 ரூபாவிலிருந்து 450 ரூபாவாகவும் உயர்த்த அனுமதி வழங்குமாறு உற்பத்தியாளர்கள் கோரியுள்ளனர்.

எரிபொருள் விலை உயர்வின் காரணமாக அனைத்து மூலப்பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால், தொழிலை தொடர்ந்து நடத்துவதற்கு பெரும் சவால் உருவாகியுள்ளது என மத்திய மாகாண இயற்கை நீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சபுமல் குமார தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த நுகர்வோர் விவகார சபை கவுன்சில் தலைவர் சட்டத்தரணி துஷார ரணதுங்க, துறைசார் அமைச்சரிடம் விவரங்களை சமர்ப்பித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?
செய்திகள்

இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?

August 2, 2026
யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை
செய்திகள்

யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை

August 2, 2026
கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு
செய்திகள்

கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு

August 2, 2026
சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை
அரசியல்

சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை

August 2, 2026
புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 05ஆம் திகதி முதல் தடை
செய்திகள்

புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 05ஆம் திகதி முதல் தடை

August 2, 2026
யாழில் பட்டாசு வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
செய்திகள்

யாழில் பட்டாசு வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

August 2, 2026
Next Post
கஹவத்தையில் காணாமல் போன இரத்தினக்கல் வியாபாரி சடலமாக மீட்பு!

கஹவத்தையில் காணாமல் போன இரத்தினக்கல் வியாபாரி சடலமாக மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.