யாழ் பருத்தித்துறை கடற்கரை பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்றைய தினம் (31) குறித்த முதியவரை சடலமாக மீட்டுள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருகையில்,
உயிரிழந்த முதியவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை தனது வீட்டாருடன் முரண்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்நிலையில் நீண்ட நேரமாக வீடு திரும்பாத காரணத்தினால் உறவினர்கள் அவரை தேடிச் சென்றுள்ளனர். இதன்போதே அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.








