மாத்தளை பகுதியில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் ஆசிரியர் சங்கமொன்றின் நிருவாக அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த உத்தியோகத்தர் பிரபல பாடசாலை ஒன்றில் அதிபராகக் கடமையாற்றுபவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்
14 வயது சிறுவனொருவனை கடுமையான முறையில் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிக்கான பயிற்சிகளுக்குச் சென்ற போது, பல சந்தர்ப்பங்களில் குறித்த சிறுவன் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட அதிபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்








