இருதயபுரம் பகுதியில் நடைபெற்ற பெரிய வெள்ளி சிலுவைப் பாதை நிகழ்வு பக்தி உணர்வை ஊட்டும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.
இருதயபுரம் ஊரணி பாடசாலை முன்பாக ஆரம்பமான சிலுவைப் பாதை, இருதய நாதர் ஆலயத்தை நோக்கி முன்னேறியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு இறைநம்பிக்கையை வெளிப்படுத்தினர்.

பாதயாத்திரையின் போது, இளைஞர் ஒன்றியம் மற்றும் பங்கு மக்கள் இணைந்து இயேசு கிறிஸ்துவின் பாடுகளை தத்துரூபமாக நாடக வடிவில் வெளிப்படுத்தினர். இயேசு சிலுவையில் அறையப்பட்ட தருணங்கள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் உயிர்ப்புடன் காட்சிப்படுத்தப்பட்டு, அவற்றின் அர்த்தம் மக்களுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்வு பங்கு தந்தையின் மேற்பார்வையில், இளைஞர் ஒன்றியம் மற்றும் பல்வேறு பக்தி சபைகள் இணைந்து சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டது.
மேலும், நண்பகல் 12 மணியளவில் திருச்சிலுவை இறக்கப்பட்டு ஆலயத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு, பெரிய வெள்ளியின் ஆன்மீக முக்கியத்துவத்தை பக்தர்களுக்கு உணர்த்தும் விதமாக அமைந்தது.
















