நோர்வூட் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்குக் காணி உறுதிப்பத்திரம் பெற்றுத்தருவதாகக் கூறி, ரூபா 45,000 இலஞ்சம் பெற்ற நபர் ஒருவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று (06) கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் தன்னை காணி ஆணையாளர் அலுவலக அதிகாரி எனப் போலியாக அடையாளப்படுத்திக் கொண்டு, ஏற்கனவே குறித்த பெண்ணிடமிருந்து ரூபா 2,75,000 பணத்தைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், கிராம உத்தியோகத்தர் அறிக்கையைப் பெற்றுத் தருவதற்காக மீண்டும் ரூபா 45,000 பணத்தை இலஞ்சமாகக் கோரியுள்ளார்.
நேற்று காலை சாமிமலை, அயிரிடி ஹாடிய பாலத்திற்கு அருகில் வைத்து இப்பணத்தைப் பெற்றுக்கொண்ட போது அவர் கையும் மெய்யுமாகக் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.








