இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தைகள் சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. அமெரிக்காவின் துணை அதிபர் தலைமையிலான குழுவும், ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றினர்.
இந்த முக்கிய சந்திப்பை முன்னிட்டு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தனது ட்ருத் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “சர்வதேச நீர்வழிகளை பயன்படுத்தி உலக நாடுகளை மிரட்டி பணம் பறிப்பதற்கான வழிகள் மட்டுமே ஈரானுக்கு இருந்தன. தற்போது பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே அவர்கள் உயிருடன் உள்ளனர்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், பத்திரிகையாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “ஜே.டி. வான்ஸ் மிகப்பெரிய சாதனையை செய்ய இருக்கிறார்” என பாராட்டியதுடன், ஈரான் இராணுவ ரீதியாக பலவீனமடைந்துள்ளதாகவும் கூறினார். “ஒப்பந்தம் ஏற்பட்டாலோ இல்லையோ, வளைகுடாவில் உள்ளஹார்முஸ் திறக்கப்படும்” எனவும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், “இந்த நிலைமை விரைவில் தீர்க்கப்படும். தேவையானால் மாற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று தெரிவித்த ட்ரம்ப், ஈரானின் கடற்படை, விமானப்படை மற்றும் தலைமை அமைப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா நன்நோக்கத்துடனே கலந்துகொண்டதாக தெரிவித்த அமெரிக்கத் துணை ஜனாதிபதி பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் 12 மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு ஈரான் உடன்படவில்லை என்றும், இரு நாடுகளுக்கும் இடையில் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








