அமெரிக்க முன்னாள் சிஐஏ இயக்குநர் ஜான் பிரென்னன், டொனால்ட் டிரம்பை “தெளிவாக மனநிலை இல்லாதவர் (clearly unhinged)” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
MS Now (MSNBC) என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரென்னன், ஈரான் தொடர்பான டிரம்பின் சமீபத்திய ஆக்ரோஷமான பேச்சுகளை (குறிப்பாக “முழு நாகரிகத்தையும் அழித்துவிடுவோம்” போன்ற கருத்துகள்) சுட்டிக்காட்டி, அவரின் கீழ் அமெரிக்க இராணுவம் மற்றும் அணு ஆயுதங்களின் கட்டுப்பாட்டில் இருப்பது பெரும் ஆபத்து என்று எச்சரித்தார்.
அமெரிக்க “25வது திருத்தம் (25th Amendment) டொனால்ட் டிரம்பை மனதில் வைத்து அவருக்கே எழுதப்பட்டது போல் பொருத்தமாக இருக்கிறது” என்று கூறினார்.
25வது திருத்தம், ஜனாதிபதி பதவிக்கு தகுதியற்றவராக இருந்தால் அவரை நீக்கும் வழிமுறையை வழங்குகிறது.
ஜனாதிபதி தானாக அறிவிக்க முடியாத அல்லது மறுக்கும் நிலையில் மனநிலை பாதிப்பு, கோமா, மிகக் கடுமையான உடல் நோய் இருப்பின் அவரை பதவி நீக்கம் செய்ய இந்த சட்டம் வழிவகுக்கிறது.)
“டிரம்பை விட ஈரானை நம்ப அதிக வாய்ப்பு உள்ளது” என்றும் பிரென்னன் கூறியுள்ளார்.
டிரம்பின் முடிவுகள் அனைத்தும் “flailing” (திணறல்) என்றும் விமர்சித்தார்.
இந்த கருத்துகள் தற்போது அமெரிக்காவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி, சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன.








