அமெரிக்காவின் United States Central Command (சென்ட்காம்) படைகள், ஜனாதிபதியின் உத்தரவின்படி, ஈரானின் துறைமுகங்களுக்குள் நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் அனைத்து கடல் போக்குவரத்தையும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை அமெரிக்க நேரப்படி ஏப்ரல் 13 ஆம் தேதி காலை 10 மணி முதல் அமல்படுத்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த கடல் முற்றுகை, ஈரான் நாட்டின் அனைத்து கடலோரப் பகுதிகளுக்கும், குறிப்பாக பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடா பகுதிகளில் உள்ள துறைமுகங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்த நாட்டைச் சேர்ந்த கப்பல்களாக இருந்தாலும், பாகுபாடின்றி இந்த நடவடிக்கை அமல்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், ஹார்முஸ் வழியாக ஈரானைத் தவிர்ந்த பிற நாடுகளின் துறைமுகங்களுக்கு சென்று வரும் கப்பல்களின் சுதந்திரமான கடல் பயணத்திற்கு தடையில்லை எனவும் சென்ட்காம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை தொடர்பான மேலதிக அறிவிப்புகள் வணிகக் கப்பல் இயக்குநர்களுக்கு முன்கூட்டியே வழங்கப்படும் என்றும், குறிப்பாக ஓமான் வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணை பகுதிகளில் பயணிக்கும் கப்பல்கள் கடற்படை தகவல் ஒலிபரப்புகளை கவனிக்க வேண்டும் என்றும், அவசியமான சந்தர்ப்பங்களில் அமெரிக்க கடற்படையுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.








