பண்டிகைக் காலத்திற்காக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த எரிபொருள் விநியோகத்திற்கான QR முறைமை, இன்று (18) நள்ளிரவு முதல் மீண்டும் அமுலுக்கு வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்கான QR கட்டுப்பாடு நீக்கப்பட்டிருந்தது. எனினும், இன்று நள்ளிரவு முதல் மீண்டும் பழைய முறைப்படியே எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்படும்.
இன்று நள்ளிரவு முதல் அனைத்து வாகனங்களுக்கும் QR முறைமையின் ஊடாக மட்டுமே எரிபொருள் விநியோகிக்கப்படும்.வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் (Odd/Even system) எரிபொருள் வழங்கும் நடைமுறை தொடரும். முன்னர் நடைமுறையில் இருந்த அதே அளவிலான எரிபொருள் ஒதுக்கீடே வாகனங்களுக்கு வழங்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்
எரிபொருள் நிலையங்களில் தேவையற்ற நெரிசலைத் தவிர்க்கவும், விநியோகத்தை முறைப்படுத்தவும் இந்த நடவடிக்கை மீண்டும் எடுக்கப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.








