அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் அன்னை பூபதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக சமுக செயற்பாட்டாளர் பிரகாஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் உள்ளூர் மக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, அன்னை பூபதி அவர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்ததுடன், அவரின் போராட்ட இலக்குகள் குறித்து கருத்துகளை பகிர்ந்தனர்.
அமைதியான முறையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வு, அன்னை பூபதி அவர்களின் வரலாற்றுப் போராட்டத்தை மீண்டும் பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

அதேசமயம் 1988 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரை வெளியேறுமாறு கோரி 8 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அன்னை பூபதியம்மா மட்டக்களப்பு மாமாங்கேஸ்வர ஆலைய முன்றலில் மார்ச் 19 ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தில் தொடர்சியாக ஈடுபட்டு ஏப்பில் 19 ஆம் திகதி உயிர்நீத்தார்.
இந்த நிலையில் அவரது 37 வது ஆண்டு நினைவேந்தலையிட்டு வடகிழக்கு எங்கும் அவருக்கு அஞ்சலி நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









