ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கொடியுடன் பயணித்த இரண்டு கப்பல்கள் மீது ஈரானிய துப்பாக்கிப் படகுகள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளதாகத் வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதோடு, கப்பல்களுக்கும் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
ஓமானின் வடகிழக்கே 20 கடல் மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்த எரிபொருள் தாங்கிக் கப்பலை ஈரானின் இரண்டு அதிவேகப் படகுகள் நெருங்கியுள்ளன.
எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி அந்தப் படகுகளிலிருந்து கப்பலை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கப்பலும் அதிலிருந்த ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும் கப்பலின் மாலுமி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் துறைமுக முற்றுகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக ஈரான் அறிவித்த சில மணிநேரங்களிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








