சித்திரை புத்தாண்டு தினத்தில் சம்மாந்துறை பகுதியில் நடைபெற்ற சட்டவிரோத மண் கடத்தல் நடவடிக்கையை தடுக்க முயன்றபோது, இரண்டு உழவு இயந்திரங்களை கைப்பற்றி சந்தேக நபர்களை கைது செய்த ஊழல் ஒழிப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் என். றிபாய்டீன், அம்பாறை மாவட்டத்திற்கு உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த இடமாற்றம், அந்தப் பகுதியில் செயல்படும் மண் மாபியா தொடர்பான அழுத்தத்தின் பின்னணியில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. குறித்த அதிகாரி முன்பு பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து வந்தவர் எனவும் உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் துறையின் சுயாதீன தன்மை குறித்து கேள்விகள் எழுந்துள்ள நிலையில், உயர் அதிகாரிகள் தலையீடு செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








