Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஜப்பானில் மீண்டும் ஒரு பயங்கர நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சுனாமி எச்சரிக்கை மீளப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக இவ்வாறு நிலநடுக்க அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, அடுத்த ஒரு வார காலத்திற்குள் பாரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாக ஜப்பானிய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 8.0 அல்லது அதற்கு மேற்பட்ட வலுவான தீவிரத்தன்மையுடன் பதிவாகக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

நேற்று அந்நாட்டின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 7.7 அலகுகளாகப் பதிவான நிலநடுக்கம் காரணமாக, கிழக்குக் கடற்கரைப் பகுதியை சுனாமி அலைகள் தாக்கியிருந்தன.

ஜப்பான் புவியியல் ரீதியாக “நெருப்பு வளையம்” (Ring of Fire) பகுதியில் அமைந்துள்ளதால், அங்கு ஆண்டுக்கு சுமார் 1,500 நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

மேலும், உலகம் முழுவதும் பதிவாகும் ரிக்டர் அளவுகோலில் 6.0 க்கும் அதிகமான நிலநடுக்கங்களில் 10% ஜப்பானிலேயே பதிவாகின்றன.

2011 மார்ச் மாதம் இவாதே மாகாணத்தின் தெற்கே ஏற்பட்ட ரிக்டர் அளவுகோலில் 9.0 ஆகப் பதிவான பாரிய நிலநடுக்கமே ஜப்பானில் இதுவரை பதிவான மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாகும். அதன் விளைவாக ஏற்பட்ட புகுஷிமா அணு உலை விபத்து, வரலாற்றின் மிக மோசமான அணுசக்தி பேரழிவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

அந்தப் பேரழிவிற்குப் பிறகு, இத்தகைய எந்தவொரு நில அதிர்வின் போதும் மக்களை உடனடியாக உயரமான இடங்களுக்கு வெளியேற்றுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தடகளத் தெரிவுக் குழு கூட்டு இராஜினாமா?; விளையாட்டுத் துறையில் புதிய பரபரப்பு!
செய்திகள்

தடகளத் தெரிவுக் குழு கூட்டு இராஜினாமா?; விளையாட்டுத் துறையில் புதிய பரபரப்பு!

July 27, 2026
முட்டையின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
செய்திகள்

முட்டையின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

July 27, 2026
தெஹிவளை மயான துப்பாக்கிச் சூடு; துப்பாக்கிதாரி கைது!
செய்திகள்

தெஹிவளை மயான துப்பாக்கிச் சூடு; துப்பாக்கிதாரி கைது!

July 27, 2026
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுக்கு உதவி செய்ததாக முன்னாள் அதிகாரி கைது
செய்திகள்

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுக்கு உதவி செய்ததாக முன்னாள் அதிகாரி கைது

July 27, 2026
புத்தளம்–கொழும்பு தனியார் பேருந்துகள் திடீர் வேலைநிறுத்தம்; பயணிகள் கடும் சிரமம்!
செய்திகள்

புத்தளம்–கொழும்பு தனியார் பேருந்துகள் திடீர் வேலைநிறுத்தம்; பயணிகள் கடும் சிரமம்!

July 27, 2026
20 மில்லியன் ரூபா கொள்ளைச் சம்பவம்; சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட ஐவருக்கு பிணை!
செய்திகள்

20 மில்லியன் ரூபா கொள்ளைச் சம்பவம்; சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட ஐவருக்கு பிணை!

July 27, 2026
Next Post
முன்னாள் எம்.பி. பிரேமலால் ஜயசேகர கைது!

முன்னாள் எம்.பி. பிரேமலால் ஜயசேகர கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.