Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சூர்யாவுடன் நடிக்கவிருந்த இலங்கை நடிகர் தளத்தில் உயிரிழப்பு

சூர்யாவுடன் நடிக்கவிருந்த இலங்கை நடிகர் தளத்தில் உயிரிழப்பு

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யாவின் நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வரும் ”கருப்பு“ திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கவிருந்த இலங்கையைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் மாரடைப்புக் காரணமாகத் திடீரென உயிரிழந்துள்ளதாக கருவாத்தோட்டம் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

நடிகர் சூர்யா மற்றும் நடிகை திரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்கும் இறுதிக்கட்டப் படப்பிடிப்புகள் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் தற்போது நடைபெற்று வருகின்றன.

இங்கு இந்திய பாராளுமன்றத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான பிரம்மாண்டமான காட்சிகள் படமாக்கப்படவிருந்தன. இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை (21) படப்பிடிப்புத் தளத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகத் தயாராக இருந்த நிலையில், இலங்கையைச் சேர்ந்த கலைஞரான அழகர் கருப்புசாமி போஸ் என்பவர் திடீரென மயக்கமடைந்து விழுந்துள்ளார்.

மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள கழிவறையில் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்ட அவரை, அங்கிருந்தவர்கள் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

திடிர் மாரடைப்பே இந்த உயிரிழப்புக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் மாத்தளை, களுதாவலை இரத்தோட்டை பகுதியை சேர்ந்த 52 வயதுடைய அழகர் கருப்புசாமி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் திருமணமாகாதவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கறுவாத்தோட்டம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

“சாணக்கியன் பாட ஏலாதா?”; பாடிய விதம் பிழை என்ற அர்ச்சுனா!
அரசியல்

“சாணக்கியன் பாட ஏலாதா?”; பாடிய விதம் பிழை என்ற அர்ச்சுனா!

June 8, 2026
“புலிகளை கொச்சைப்படுத்திய சங்கீதன்”; குடிவெறியில் பாடியதாக அர்ச்சுனா கடும் தாக்கு
அரசியல்

“புலிகளை கொச்சைப்படுத்திய சங்கீதன்”; குடிவெறியில் பாடியதாக அர்ச்சுனா கடும் தாக்கு

June 8, 2026
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது; நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன்!
செய்திகள்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது; நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன்!

June 8, 2026
மட்டக்களப்பில் 24 வயது பெண் காணாமல் போனதாக அவசர தகவல்
செய்திகள்

மட்டக்களப்பில் 24 வயது பெண் காணாமல் போனதாக அவசர தகவல்

June 8, 2026
சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி பேருந்து ஓட்டியவர் கைது!
செய்திகள்

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி பேருந்து ஓட்டியவர் கைது!

June 8, 2026
மனிதர்கள் காடுகளை அழிப்பதால்தான் யானைகள் கிராமங்களை நோக்கி வருகின்றன; மட்டு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி சுரேஸ்குமார்
செய்திகள்

மனிதர்கள் காடுகளை அழிப்பதால்தான் யானைகள் கிராமங்களை நோக்கி வருகின்றன; மட்டு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி சுரேஸ்குமார்

June 8, 2026
Next Post
இலங்கையர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு; சுகாதார அமைச்சு

இலங்கையர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு; சுகாதார அமைச்சு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.