Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நிதி அமைச்சின் பணம் போலி கணக்கிற்கு மாற்றப்பட்டதா?; அரசாங்கம் மீது நாமல் கடும் குற்றச்சாட்டு

நிதி அமைச்சின் பணம் போலி கணக்கிற்கு மாற்றப்பட்டதா?; அரசாங்கம் மீது நாமல் கடும் குற்றச்சாட்டு

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அரச பணம் 2.5 மில்லியன் டொலர் யாருடைய கணக்கிற்குச் சென்றது? அல்லது அதைவிட அதிக பணம் சென்றதா? என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,323 கொள்கலன்கள் விவகாரம் மற்றும் நிலக்கரி மோசடியைப் போலவே நிதி அமைச்சின் பணம் போலி வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்ட மோசடியையும் மூடிமறைக்க ஜனாதிபதியும் அரசாங்கமும் முயற்சிக்கின்றனர்.

ஒருபுறம் அரசாங்கம் தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்கிறது. அந்த நஷ்டத்தை மக்கள் மீது சுமத்துகிறது. மறுபுறம் அரசாங்கத்திற்குத் தெரியாமலேயே அதன் அதிகாரிகள் அரசாங்கப் பணத்தை போலி கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர்.

போலி மின்னஞ்சல் செய்தி ஒன்றின் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் 2.5 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்துள்ளது. ஆனால் அரசாங்கம் இன்றுவரை எடுத்துள்ள சட்ட நடவடிக்கை என்ன?.

முன்னொரு காலத்தில் நல்லாட்சி அரசாங்கம் ஜே.வி.பி-யுடன் இணைந்து ஊழல் ஒழிப்புக் குழுவை அமைத்து ‘திருடர்களைப் பிடிப்போம்’ எனக் கூறிக்கொண்டு மத்திய வங்கியை கொள்ளையடித்தது.

இப்போது அவர்களே மீண்டும் அரசாங்கத்திற்கு வந்து தாங்கள் திருடர்களைப் பிடிப்பதாகக் கூறிக்கொண்டு நிதி அமைச்சின் பணத்தையும் தமது கணக்குகளுக்கு மாற்றும் நிலைக்கு வந்துள்ளனர்.

நிதி அமைச்சிற்கு ஏதேனும் கொடுப்பனவு செய்யவோ கடன் அல்லது வட்டி செலுத்தவோ மின்னஞ்சல் ஒன்று வருகிறது என்றால் அதற்கு நிதிச் செயலாளர் மற்றும் நிதி அமைச்சர் என்ற ரீதியில் இந்த நாட்டின் ஜனாதிபதியே பொறுப்புக்கூற வேண்டும்.

தனது கீழுள்ள நான்கு புதிய அதிகாரிகள் செய்த தவறு அதனால் அவர்களை வேலையை விட்டு நீக்கிவிட்டேன் எனக் கூறி ஜனாதிபதி எப்படி கூற முடியும்.

ஜனாதிபதியே விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர். இந்த நாட்டின் நிதி அமைச்சின் கணக்கிலிருந்தே பணம் வெளியேறியுள்ளது வேறு எங்கிருந்தும் அல்ல. இதற்கு முன்னர் கடன்கள் மத்திய வங்கியூடாகவே செலுத்தப்பட்டன.

தற்போது புதிய சட்டத்தின் மூலம் அந்த அதிகாரம் நிதி அமைப்பிற்கு கிடைத்துள்ளது. எனவே நிதி அமைச்சிற்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி செயலாளர் மற்றும் அதிகாரிகள் இதற்குப் பொறுப்புக்கூற வேண்டும்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

திருகோணமலையில் வேன் விபத்து; இருவர் படுகாயம்
செய்திகள்

திருகோணமலையில் வேன் விபத்து; இருவர் படுகாயம்

June 27, 2026
அதிக விலைக்கு கீரி சம்பா அரிசி விற்பனை; தம்புள்ளையில் இரு கடைகளுக்கு ரூ. 2 இலட்சம் அபராதம்!
செய்திகள்

அதிக விலைக்கு கீரி சம்பா அரிசி விற்பனை; தம்புள்ளையில் இரு கடைகளுக்கு ரூ. 2 இலட்சம் அபராதம்!

June 27, 2026
வெளிநாட்டு செலாவணி இழப்பு விவகாரம்; மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை!
செய்திகள்

வெளிநாட்டு செலாவணி இழப்பு விவகாரம்; மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை!

June 27, 2026
பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்த நபர் கைது; விசாரணையில் பரபரப்பு தகவல்கள்
செய்திகள்

பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்த நபர் கைது; விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

June 27, 2026
‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!
செய்திகள்

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!

June 27, 2026
நீதிமன்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட பாரியளவு போதைப்பொருட்கள் அழிப்பு!
செய்திகள்

நீதிமன்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட பாரியளவு போதைப்பொருட்கள் அழிப்பு!

June 27, 2026
Next Post
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரில் நிதி மோசடி

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரில் நிதி மோசடி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.