Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரச வைத்தியசாலைகளில் PET Scan பரிசோதனை நிறுத்தம்!

அரச வைத்தியசாலைகளில் PET Scan பரிசோதனை நிறுத்தம்!

3 months ago
in செய்திகள்

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகிய அரசாங்க வைத்தியசாலைகளில் புற்றுநோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் பெட் ஸ்கேன் (PET scan) பரிசோதனைகள் மார்ச் 27 ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பெட் ஸ்கேன் பரிசோதனைகளை மேற்கொள்வதற்குப் பயன்படுத்தப்படும் FDG – Fluoro deoxy glucose எனும் கதிரியக்க இரசாயனப் பொருள் இல்லாததே இதற்குக் காரணம் என அந்தச் சங்கத்தின் தலைவர் சாணக்க தர்மவிக்ரம விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கதிரியக்க இரசாயனம் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. எனினும், விநியோகஸ்தரின் தேசிய ஔடதங்கள் ஒழுங்குமுறை அதிகாரசபை (NMRA) பதிவு புதுப்பிக்கப்படாத காரணத்தினால் இந்த விநியோகம் தடைப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை விநியோகஸ்தர் பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்ததை மாற்றி, ‘மருந்து’ (Medicine) பிரிவின் கீழ் பதிவு செய்யுமாறு குறித்த நிறுவனத்திற்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குமுறை அதிகாரசபை அறிவித்துள்ளது.

அதன்படி, பழைய பதிவு முடிவடைந்த மார்ச் 27 ஆம் திகதியே புதிய நிபந்தனைகளுக்கு அமைய நிறுவனம் விண்ணப்பித்திருந்த போதிலும், இதுவரை அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பதிவுப் பிரச்சினை காரணமாக, இலங்கைக்கு FDG கதிரியக்க இரசாயனத்தைக் கொண்டு வர எந்தவொரு நிறுவனத்திற்கும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகிய இரண்டு அரச வைத்தியசாலைகளில் மட்டுமே பெட் ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இப்பரிசோதனையைச் செய்து கொள்வதற்காக ஏற்கனவே 4 மாதங்களுக்கும் மேலான காத்திருப்புப் பட்டியல் நிலவுகிறது.

தனியார் வைத்தியசாலைகளில் இப்பரிசோதனையை மேற்கொள்வதற்கு 3 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகை செலவாகும்.

எனினும், தேசிய ஔடதங்கள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் பதிவு இல்லாத காரணத்தினால், தற்போது தனியார் துறையினராலும் இந்தப் பரிசோதனையை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பெட் ஸ்கேன் பரிசோதனை மூலம்:

புற்றுநோய் செல்களைத் துல்லியமாக அடையாளம் காண்பதுடன் அவற்றின் செயல்பாடுகளையும் கண்டறியலாம்.

புற்றுநோய் செல்கள் பரவியுள்ள அளவைத் துல்லியமாகத் தீர்மானிக்கலாம்.

புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைக்குப் பின்னர், புற்றுநோய் செல்கள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்தலாம்.

புற்றுநோயாளிகளுக்கு மிகவும் இன்றியமையாத இந்தப் பரிசோதனை தடைப்பட்டுள்ள நிலையில், இப்பிரச்சினைக்குத் தீர்வு காண சுகாதார அதிகாரிகள் உடனடியாகத் தலையிட வேண்டும் என அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தேசத்துரோகக் குற்றச்சாட்டு; ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை
உலக செய்திகள்

தேசத்துரோகக் குற்றச்சாட்டு; ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை

July 30, 2026
தெஹிவளையில் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது
செய்திகள்

தெஹிவளையில் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது

July 30, 2026
சவுதியில் கைதான இலங்கையர் அனோஜன் சிவராஜா விடுதலைக்கு இலங்கை முஸ்லிம்கள் கருணை மனு!
செய்திகள்

சவுதியில் கைதான இலங்கையர் அனோஜன் சிவராஜா விடுதலைக்கு இலங்கை முஸ்லிம்கள் கருணை மனு!

July 30, 2026
வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்
செய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

July 29, 2026
மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்
செய்திகள்

மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்

July 29, 2026
காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு
செய்திகள்

காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு

July 29, 2026
Next Post
விதிமுறைகளை மீறும் மருந்தகங்களின் உரிமங்கள் இரத்துச்செய்யப்படும்; மட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர்

விதிமுறைகளை மீறும் மருந்தகங்களின் உரிமங்கள் இரத்துச்செய்யப்படும்; மட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.